Posts

இரு கடல் ஒரு நிலம் - விஸ்வநாதன்

Image
நான் பயணக் கட்டுரைகள் படித்தது குறைவு. அக்குறுகிய அனுபவத்தில் நான் கண்டுகொண்டது, பெரும்பாலான பயண கட்டுரைகள் அப்பயணத்தின் ஊடேயிருந்த இடங்களை அடர்த்தியான வரலாற்றுத் தகவல்களுடன் நம்மை ஒரு புள்ளியில் நிலை நிறுத்தி அனுபவிக்க வைத்துவிட்டு அங்கிருந்து தாவி வேறு ஒரு இடத்தை பற்றிப் பேசி செல்பவையாக இருக்கும். அது ஒரு விதத்தில் தகவல்களை அள்ளி தருபவையாக இருந்தாலும், பயணத்தின் தொடர் அனுபவத்தைத் தவறவிடுகிறது. படிப்பவர்களைப் பயணத்தில் சேர்த்துக்கொள்ள மறுத்துவிடுகிறது. எந்த விதத்திலும் அது படிப்பவர்களையும் அப்பயணத்தை மேற்கொள்ளத் தூண்டி விடக்கூடியதாக இல்லாமல் இருக்கிறது. அதற்கான சரியான காரணம் தெரிவில்லையென்றாலும், அப்பயணக் கட்டுரைகளை எழுதுவதற்காகவே அப்பயணங்கள் செய்யப்படுவதாக இருப்பதால் பயணங்களின் அனுபவத்தைக் கடத்த தவறவிட்டு வெறும் தகவல் களஞ்சியமாக மாறிவிடுகிறது என்று எண்ணுகிறேன். மனம் திளைக்கப் பயணத்தை அனுபவித்துவிட்டு அதை எழுத வேண்டும் என்ற உந்துதல் வரும்போது எழுதப்படுபவை அந்த அனுபவத்தையும் அவர்கள் அறியாமலேயே எழுத்தில் கடத்திவிடுகிறார்கள். ஜெவின் "அருகர்களின் பாதை" அப்படி ஒரு அனுபவத்தை என்னு...

அஞ்சலை - கண்மணி குணசேகரன் - ரசனையுறை

Image
    அஞ்சலையை நான் பேருந்தில் பயணம் செய்த போது பார்த்திருக்கிறேன். அன்று அவள் சன்னலோரம் தவிப்பாய் அமர்ந்திருந்தாள். எங்கள் வயலில் அறுப்பு நாள் ஒன்றின் போது பார்த்திருக்கிறேன். தலையில் உள்பாவாடை ஒன்றைக் கட்டிக்கொண்டு ஆண் சட்டை அணிந்து களத்தில் நெல் அடித்துக்கொண்டிருந்தாள். சென்னையிலிருந்து எங்கள் ஊருக்குப் பயணம் செய்யும் வழியில் முந்திரி மரங்கள் நிறைந்த விருத்தாசலத்தைக் கடக்கும்போது ஒருமுறை பார்த்திருக்கிறேன். சாலையிலிருந்த வேகத்தடையில் கார் ஏறி இறங்கியபோது மஞ்சளும், சிவப்புமாயிருந்த முந்திரிப்பழத்தை இரு கைகளிலும் விரல்களுக்கிடையே லாவகமா நிறுத்தி எங்களை வாங்கச் சொல்லி கண்ணாடியில் முகம் பதித்துச் சென்றாள். சினிமா கொட்டகையில் சீட்டு வாங்கிவிட்டு உள்ளே செல்ல அனுமதிக்கக் காத்திருக்கும் இடைவெளியில் பார்த்திருக்கிறேன். வெளியே இருந்த நரிக்குறவர்கள் ஆடும் ஆட்டத்தைக் கண்டு பொங்கி வரும் சிரிப்பை அருகிலிருந்தவனின் தோளில் முகம் புதைத்துச் சிரித்துக்கொண்டிருந்தாள். இப்படி நிறைய இடங்களில் அஞ்சலயை கண் சிமிட்டும் ஒரு சில மணித்துளிகளில் இடைவெளியில் பார்த்திருக்கிறேன். இந்நாவலில் வாழ்ந்திருக்கும்...

கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன் - ரசனையுரை

Image
    அசோகமித்திரன் அவரின் சினிமா துறை சார்ந்த அனுபவங்களை வைத்து ஒரு குறுநாவலாக எழுதியுள்ளார். கதை என்பது என்று ஏதும் இல்லாமல் நிகழ்வுகளை அதன் நுணுக்கத்துடன் மிகையுணர்ச்சி ஏதுமில்லாமல் அவர் எழுதும் சிறுகதையை போலவே இந்நாவல் அமைந்துள்ளது. பொதுவாக அவரின் கதையில் நிகழும் நிகழ்வுகள் படிக்கும்போது ஏற்படுத்தும் தாக்கத்தைவிட வேறு ஏதோ ஒரு பொழுதில் சட்டென நம்மை நிறுத்தி அதனை சிந்திக்க வைத்து அந்நிகழ்வு மெல்ல நம்முள் விரிவடைந்து விரிவடைந்து அதில் இருக்கும் ஒரு ஆழமான வாழ்க்கையின் ஒரு உண்மையை கண்டடைய வைக்கும் அந்த உணர்வு இந்நாவலிலும் ஏற்படுகிறது. இந்நாவலில் முதல் அத்தியாயத்திலேயே கிட்டத்தட்ட எல்லா கதாப்பாத்திரங்களையும் அறிமுகப்படுத்திவிடுகிறார். பின்பு நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் முதல் அத்தியாயத்தில் வந்த வெவேறு கதாப்பாத்திரத்தின் வழியே காலத்தின் ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து மற்றொன்றுக்கு தாவி சென்று கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு புள்ளியிலும் மனிதர்கள் அடைந்த ஏற்றமும் இறக்கமும் போகிறபோக்கில் மிகையில்லாமல் அது தான் யதார்த்த்தம் என்பது போல சொல்லி செல்கிறது. அது காட்டும் வாழ்க்கையின் சித்திர...

அம்மா வந்தாள் - தி ஜானகிராமன் - ரசனையுரை

Image
திரு. தி.ஜானகிராமன் அவர்கள் எழுதிய நாவலோ அல்லது சிறுகதைகளோ இதற்கு முன் படித்ததில்லை. அவரின் 'மோகமுள்' நாவலைப் பற்றிப் பரவலாக இலக்கிய உலகில் பலர் பேசி விமர்சித்துக் கேள்விப்பட்டிருக்கிறேன். "அம்மா வந்தாள்" என்ற நாவலைப் பற்றியும் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் "நல்ல நாவல். படிக்கவேண்டும்" என்பதைத் தவிரப் பிற ஒன்றும் நினைவில் இப்போது இல்லை. எது இந்த நாவலை வாங்கத் தூண்டியது என்று இப்போது சரியாக நினைவில்லை. வாங்கி என் புத்தக அலமாரியில் படிக்க வேண்டும் என்ற வரிசையிலிருந்தது.  இந்நாவலில் வரும் கதைப்பின்னணி கும்பகோணத்தில் பிறந்த எனக்கு மிக நெருக்கமான ஒன்றுதான். பள்ளிக்குச் செல்லும் போது காவேரி ஆற்றைக் கடந்து திரும்பும் ஒரு திருப்பத்தில் வேத பாட சாலை ஒன்று இருக்கும். அதன் பெரிய சுவருக்குப் பின்னால் பல சிறுவர்களும் என் வயதொத்த இளைஞர்களும் வேதங்களை வாய் விட்டுப் படித்து மனனம் செய்து கொண்டிருப்பார்கள். சைக்கிளில் அதைக் கடக்கும் போது அவர்கள் வாய்விட்டு வேதங்களைச் சொல்வது என் பள்ளிக்கூடத்தில் வாய்ப்பாடுகளை மனனம் செய்ய அனைவரும் அமர்ந்து ஒரே குரலில் சொல்வது நினைவ...

குள்ளச் சித்தன் சரித்திரம் - யுவன் சந்திரசேகர் - ரசனையுரை

Image
சில வருடங்களுக்கு முன்பு என் நண்பர் ஒருவருடன்  பேசிக்கொண்டிருக்கும்போது   அவர் தற்செயலாக இந்த   கதையைப்   பற்றிக்   குறிப்பிட்டார். பின்பு விஷ்ணுபுரம் இலக்கிய   விருதுக்குத்   திரு. யுவன் அவர்கள் தேர்வான போது மீண்டும்   இக்கதையைப்   பற்றிய   குறிப்புகளைப்   படித்தேன். இன்று   இந்நாவலைப்   படித்து விட்டு எண்ணிப்பார்க்கும்போது அவைகள்   தற்செயல்கள்  அல்லாமல் ஏதோ ஒரு தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது.  பல சம்பவங்களின்  தொகுப்பாகச்  செல்லும்  இந்நாவலில்   ஊடே  மனிதர்கள் அற்புதத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை, அது எழுப்பும் வாழ்க்கையின் மீதான கேள்வியை,  தற்செயல்களில்   கண்ணுக்குத்  தெரியாமல் பிணைக்கப்பட்டிருக்கும்  நூலிழையின்  சாத்திய  கூறுகளைக்  காட்டுகிறது. திருமணமாகி வெகு நாட்களாகியும்  பழனிக்கும்  சிகப்புக்கும்  குழந்தை பிறக்காமலிருக்கிறது.  சிகப்பி  இறை மீதான நம்பிக்கையும் கடுமையான  சடங்குகளைப்  பின்பற்...

ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி - ரசனையுரை

Image
திரு. சுந்தர ராமசாமியின் படைப்புகள் பற்றிய அறிமுகம் திரு.ஜெயமோகன் அவர்கள் வழியாகவே எனக்குக் கிடைத்தது. நவீனத் தமிழ் இலக்கியத்தில் தன்னுடைய அணுக்கமான ஆசிரியர்களில் ஒருவர் சுந்தர ராமசாமி என்று மிக உயர்ந்த இடத்தில் ஜெயமோகன் வைத்திருப்பதின் மூலம் சுந்தர ராமசாமியின் அறிவார்ந்த இலக்கிய திறனும் அதில் அவருடைய பெரும் பங்கும் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் எனக்குச் சுந்தர ராமசாமியின் அவர்களின் படைப்புகளை எங்கிருந்து தொடங்குவது என்ற ஒரு தயக்கம் இருந்தது. அதற்கு முதல் காரணம் என் நவீனத் தமிழ் இலக்கிய வாசிப்பு ஜெயமோகனிலிருந்து தொடங்கி அவரின் வழிகாட்டுதலின் மூலம் பின்னோக்கி நகர்ந்து பல இலக்கிய ஆளுமைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் பெரும் மனத்தடங்களாக எனக்கு இருந்தது, அவ்வாசிரியர்கள் பயன்படுத்தியிருக்கும் கவித்தன்மையும் உருவகங்களும் இன்று தேய் வழக்காகி நவீனத்தன்மையற்ற தன்மை ஒன்று இருப்பது போல இருந்ததால் அதில் மனம் ஒத்துப் படிக்கச் சற்று சிரமமாக இருந்தது. அதன் யதார்த்தம் புரிந்தாலும் ஏனோ மனம் ஒன்றி படிக்க இயலவில்லை. ஆனாலும் அவைகளையும் மீறி அவர்களின் படைப்புகளிலிருந்த வாழ்க்கையனுபவமும் இலக்கிய உன்னத...

கோபல்ல கிராமம் - கி.ராஜநாராயணன் - ரசனையுரை

Image
திரு கி.ராஜநாராயணன் அவர்கள் எழுதிய கோபல்ல கிராமம் என்ற நாவலைச் சமீபத்தில் படித்தேன். அது பற்றிய என் பார்வை. கோவில்பட்டிக்கு அருகே கோபல்ல என்ற கிராமத்தில் நடக்கும் இக்கதை பாளையப்பட்டுகள் தங்கள் அரசை இழந்து வெள்ளையர்கள் (கும்பினி) ஆட்சி அதிகாரம் செலுத்த ஆரம்பிக்கும் முன் நடப்பதாக எழுதப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் செல்வச் செழிப்பாக வாழ்ந்த கோட்டையார் குடும்பம், ஊரில் தன் குடும்பத்துக்கே உரிய மரியாதையையும், கௌரவத்தையும் மட்டும் வைத்துக் கொண்டு மற்ற அனைத்தையும் இழந்து இருந்தது அப்போது. ஊரில் நடக்கும் அனைத்துப் பஞ்சாயத்துகளும் கோட்டையார் குடும்பத் தலைமையில் தான் நடக்கிறது. அக்குடும்பத்தில் மொத்தம் அண்ணன் தம்பிகள் ஏழு பேர். குடும்பம் சார்ந்து இருக்கும் வேலைகளை ஒவ்வொருவரும் ஓர் இலாகாவைப் பார்த்துக்கொள்கிறார்கள். இவர்களைத் தவிர அக்கையா என்பவரும் அக்குடும்பத்திலேயே சிறு வயதிலிருந்து அங்கேயே அவர்களுடன் வாழ்கிறார். அதோடு ஊர்குடும்பன் என்ற மற்றொருவர் எடுபிடியாக அங்கே இருக்கிறார். இவர்களுடன் நூத்தி முப்பத்தேழு வயதில் பூட்டி மங்கத்தாயாரு அம்மாளும் படுத்த படுக்கையாக இருக்கிறார். இக்கதை அவ்வூரின் ஊருணியி...