Posts

ஒரு புளியமரத்தின் கதை - ரசனையுரை

Image
திரு. சுந்தர ராமசாமியின் படைப்புகள் பற்றிய அறிமுகம் திரு.ஜெயமோகன் அவர்கள் வழியாகவே எனக்குக் கிடைத்தது. நவீனத் தமிழ் இலக்கியத்தில் தன்னுடைய அணுக்கமான ஆசிரியர்களில் ஒருவர் சுந்தர ராமசாமி என்று மிக உயர்ந்த இடத்தில் ஜெயமோகன் வைத்திருப்பதின் மூலம் சுந்தர ராமசாமியின் அறிவார்ந்த இலக்கிய திறனும் அதில் அவருடைய பெரும் பங்கும் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் எனக்குச் சுந்தர ராமசாமியின் அவர்களின் படைப்புகளை எங்கிருந்து தொடங்குவது என்ற ஒரு தயக்கம் இருந்தது. அதற்கு முதல் காரணம் என் நவீனத் தமிழ் இலக்கிய வாசிப்பு ஜெயமோகனிலிருந்து தொடங்கி அவரின் வழிகாட்டுதலின் மூலம் பின்னோக்கி நகர்ந்து பல இலக்கிய ஆளுமைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் பெரும் மனத்தடங்களாக எனக்கு இருந்தது, அவ்வாசிரியர்கள் பயன்படுத்தியிருக்கும் கவித்தன்மையும் உருவகங்களும் இன்று தேய் வழக்காகி நவீனத்தன்மையற்ற தன்மை ஒன்று இருப்பது போல இருந்ததால் அதில் மனம் ஒத்துப் படிக்கச் சற்று சிரமமாக இருந்தது. அதன் யதார்த்தம் புரிந்தாலும் ஏனோ மனம் ஒன்றி படிக்க இயலவில்லை. ஆனாலும் அவைகளையும் மீறி அவர்களின் படைப்புகளிலிருந்த வாழ்க்கையனுபவமும் இலக்கிய உன்னத

கோபல்ல கிராமம் - ரசனையுரை

Image
திரு கி.ராஜநாராயணன் அவர்கள் எழுதிய கோபல்ல கிராமம் என்ற நாவலைச் சமீபத்தில் படித்தேன். அது பற்றிய என் பார்வை. கோவில்பட்டிக்கு அருகே கோபல்ல என்ற கிராமத்தில் நடக்கும் இக்கதை பாளையப்பட்டுகள் தங்கள் அரசை இழந்து வெள்ளையர்கள் (கும்பினி) ஆட்சி அதிகாரம் செலுத்த ஆரம்பிக்கும் முன் நடப்பதாக எழுதப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் செல்வச் செழிப்பாக வாழ்ந்த கோட்டையார் குடும்பம், ஊரில் தன் குடும்பத்துக்கே உரிய மரியாதையையும், கௌரவத்தையும் மட்டும் வைத்துக் கொண்டு மற்ற அனைத்தையும் இழந்து இருந்தது அப்போது. ஊரில் நடக்கும் அனைத்துப் பஞ்சாயத்துகளும் கோட்டையார் குடும்பத் தலைமையில் தான் நடக்கிறது. அக்குடும்பத்தில் மொத்தம் அண்ணன் தம்பிகள் ஏழு பேர். குடும்பம் சார்ந்து இருக்கும் வேலைகளை ஒவ்வொருவரும் ஓர் இலாகாவைப் பார்த்துக்கொள்கிறார்கள். இவர்களைத் தவிர அக்கையா என்பவரும் அக்குடும்பத்திலேயே சிறு வயதிலிருந்து அங்கேயே அவர்களுடன் வாழ்கிறார். அதோடு ஊர்குடும்பன் என்ற மற்றொருவர் எடுபிடியாக அங்கே இருக்கிறார். இவர்களுடன் நூத்தி முப்பத்தேழு வயதில் பூட்டி மங்கத்தாயாரு அம்மாளும் படுத்த படுக்கையாக இருக்கிறார். இக்கதை அவ்வூரின் ஊருணியி
  பைதல் பாகன்       பெருஞ்சோறு பயந்து ,  பல்யாண்டு புரந்த பெருங்களிறு இழந்த பைதற் பாகன்  அதுசேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை , வெளில்பாழ் ஆகக் கண்டு கலுழ்ந்தாங்குக் , கலங்கினேன் அல்லனோ யானே ,  பொலந்தார்த் தேர்வண் கிள்ளி போகிய பேரிசை மூதூர் மன்றங் கண்டே ?     யானை   ஏனோ எந்த வயதிலும் அலுப்புத்தட்டுவதேயில்லை. அதிலும் யானையின் உடலசைவுகள் ஏனோ மனதுக்குள் குதூகலம் ஒன்றைச் சட்டென ஏற்படுத்திவிடுகிறது. தினசரி கவலைகளில் திரிந்த மனம் அனைத்தையும் உதறி ஒரு புள்ளியில் குவிந்து இலகுவாகிவிடுகிறது.   தெருவில் யானை செல்லும்போது உறைந்து சலனமற்று நிற்பவர்களில் பெரும்பாலானோர் நாற்பது வயதைக் கடந்தவர்களாக இருக்கிறார்கள். ஏனோ அந்த பிரம்மாண்டத்தினுள் இருக்கும் சிறு குழந்தைத்தனம் வாழ்க்கையின் பெரும்பகுதியைக்   கடந்தவர்களுக்கு ஒரு ரகசியத்தைச் சொல்கிறது போலும். கோவில்கள் நிறைந்த எங்களூரில் அப்போதெல்லாம் ஒவ்வொரு கோவிலிலும் ஒரு யானை நின்றுகொண்டிருக்கும்.பெரும்பாலும் பாகனுக்காக இரந்து கொண்டிருக்கும் அதனை அவ்வளவு எளிதில் என்னால் கடந்துசெல்ல முடியாது. சிறிது நேரம் நின்று அதன் அசைவுகளையே பார்த்துக்கொண்டிருப்பேன். வெளியுலகத
  கேட்குநர் உளர்கொல் ?   சிறைபனி உடைந்த சேயரி மழைக்கண் பொறையரு நோயொடு  புலம்பலைக் கலங்கிப் பிறருங் கேட்குநர் உளர்கொல் உறைசிறந்து தூதை தூற்றுங் கூதிர் யாமத்து தானுளம் புலம்புதொ றுளம்பும் நாநவில் கொடுமணி நல்கூர் குரலே. (வெண்கொற்றனா ர் ,  குறுந்தொகை)     செவிலியர் ஆஞ்செலா இரத்தம் எடுப்பதற்குத் தேவையான ஊசியைத் தயார்ப்படுத்தும் இடைவெளியில் ,  மார்ஷா தன் கையை இலகுவாக்கிக் கொண்டு ,   கண் மூடி முகத்தில் எந்த வித சலனமும் இல்லாமல் காத்திருந்தாள். ஊசியின் கூர்மை அவள் தோளை ஊடுருவிச் செல்லும் அந்த கண நேரத்தில் வழக்கம்போல இன்றும்  மார்ஷாவுக்கு ,  இராணுவச் சீருடை அணிந்து ,  முகமெங்கும் புன்னகை படர்ந்து இருக்கும் தன் மகள் சாரவின் புகைப்படம் நினைவுக்கு வந்து சென்றது. சாரா ,  மார்ஷாவின் ஒரே மகள். அமெரிக்க இராணுவத்தில் மருத்துவராக வேலைப்பார்த்துக் கொண்டிருக்கும்போது விபத்து ஒன்றில் ஒரு வருடத்திற்கு முன் இறந்துபோனாள். மார்ஷாவின் எண்ணங்கள் இரவும் பகலும் சாரவின் நினைவிலேயே இருந்தன.   ஆஞ்செலா இரத்தத்தைப் பல வண்ண குப்பிகளில் செலுத்தி  “ மார்ஷா , 65”  எனப் பெயரையும் ,  வயதையும் எழுதி வேறு ஒரு சிறுப் பெட்டியில்
  வெறியுறு வனப்பு சிறு வயதில் பள்ளி விடுமுறைகளின் போது திருச்சியிலிருந்த பெரியம்மாவின் வீட்டுக்குத்தான் பெரும்பாலும் செல்வோம். அதுதான் அப்போதைக்கு அப்பாவுக்கு அதிக செலவில்லாமல் இருந்தது, விடியற்காலையில் அவசரமாகப் படுக்கையிலிருந்து எழுப்பிவிடப்பட்டுக் குளித்து சோழன் ரயிலைப் பிடிக்க ரயில் நிலையத்திற்குள் நானும் என் அக்காவும் தள்ளிவிடப்படுவோம். அந்த நேரத்தில் ரயில் நிலையம் தூங்கி வழிந்துகொண்டிருக்கும். நிலையத்தை ஒட்டி வளர்ந்திருக்கும் ஆலமரங்களில் அடைந்திருக்கும் பறவைகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும். நானும் அக்காவும் அங்கிருக்கும் ஏதோ ஒரு மூட்டையின் மீது அமர்ந்து, உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிக் கொண்டிருப்போம். சிறிது நேரம் கழித்து விழித்துப் பார்க்கும் போது அங்கிருக்கும் ஆலமரங்கள் விலங்கு ஒன்று உயிர் பெற்றது போல பல்வேறு ஒலிகளுடன், பறவைகள் பறப்பதும் அமர்வதுமாகப் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். அப்பா உறங்காமல் விழித்தே இருப்பார். அவருக்கு ரயிலில் பயணம் செய்வதென்பது மிகுந்த திட்டமிடலும் மெனக்கெடலும் கூடிய ஒரு சவாலான செயல். போய்ச் சேரும் வரை ஒரு பதைபதைப்புடன் இருப்பார். ரயில் வந்து, இருக்கைய
  யாருமற்ற வீட்டில் மலர்ந்திருக்கிறது ரத்தம் ஒழுகும் பாவனையில் செம்பருத்தி ஒன்று அத்துமீறி உள் நுழைந்து அனைத்தையும் கலைத்துவிட்டுப் போகிறது வெயில் முணுமுணுக்கின்றன புறவாசலில் தொங்கும் மணிகள் யாரையோ எதிர்பார்த்து கண்ணாடியில் முட்டி செல்கிறது அந்த குருவி சோகத்தின் படிமமாகித் துவண்டு தொங்குகின்றன திரைச்சீலைகள் யாரேனும் ஒருவர் தன்னை மரிக்கச் செய்வார்கள் என்று காத்திருக்கிறது தனிமை அனைத்தையும் அறிந்து சிறு அதிர்வில் நகர்ந்து கொண்டேயிருக்கிறது காலம்.
Image
  திரு.எஸ். ராமகிருஷ்ணனின் பயணக்கட்டுரைகள் எனக்கு பிடித்தமான ஒன்று. அது ஏற்படுத்திய தாக்கத்தில் நானும் எழுத முயன்று, அது எவ்வளவு சவாலான ஒன்று என்பதை உணர்ந்து பாதியிலேயே நிறுத்திவிட்டேன். மிக முக்கியமான தடையாக எனக்கு இருந்தது, பயணத்துக்குப் பின்பு, மன நிலையை முன்பிருந்த உணர்வு புள்ளிக்கு நகர்த்தி அதே வியப்பை, பேரானந்தத்தை, கொந்தளிப்பை மீட்டெடுப்பது. மனம் அந்த தருணத்தில் அனைத்தையும் அடைந்து வேறு நிலைக்கு மாறிவிட்டதுபோல ஒரு உணர்வு வந்து வெறுமையை அடைந்திருக்கும். இரவில் ஒரு பெருங்கனவில் திளைத்திருந்த மனம் காலை எழுந்தபின்பு அத்தனையும் மறந்துவிடும் தருணம் போல.   சிறுகதைக்கான ஒரு கரு/உணர்வு வந்தவுடன் பெரும்பாலும் அதனை மனதில் நிகழ்த்திப்பார்க்காமல் எழுதும்போது என்ன வருகிறதோ அதனை எழுத வேண்டும் என்று திரு.ஜெ ஒரு முறை சொல்லியிருந்தார். அது அவ்வளவு எளிதானதல்ல. அதற்கு ஒரு மனப்பயிற்சி தேவைப்படுகிறது.  நண்பர் பாலாஜியின் கரூர் டைரிஸ் கட்டுரைகள் படித்தேன். முதல் நான்கு பகுதிகள் நிறையக் குறிப்புகளுடன் நகர்ந்துகொண்டிருந்தன. தனியாக நீண்ட விமானப் பயணம் என்பது எப்போதாவது எனக்கு நிகழ்வது. ஒரு மச்சம் போல என்