Posts

Showing posts from May, 2025

காடு இட்டுச் செல்லும் பாதை

Image
அப்போது விகடனில் தொடராக வந்துகொண்டிருந்த சங்க சித்திரங்கள் படித்து, அதனை மனதில் அசைபோட்டுக்கொண்டிருந்த காலங்கள். வார நாட்களில் மேன்ஷனிலிருந்த அனைவரும் வேலைக்குச் சென்ற பிறகு, யாரோ துணி துவைக்கும் சத்தத்தையும், ஒளிரும் மின்சாரக் கம்பியில் அமர்ந்து கரைந்து செல்லும் காகத்தின் குரலையும் கேட்டுத் தாளமுடியாமல் இருந்த நாட்கள். அன்றைய மன நிலையில் யாரேனும் காடு பற்றிக் கேட்டிருந்தால், அவை கரிய இருட்டில் மரங்கள் அடர்ந்த வனத்தின் ஊடே செல்லும் ஒரு பாதை மட்டுமாகவே இருந்திருக்கக்கூடும். ஆழ்கிணறுக்குள் செல்லும் ஒரு சரடு போல. அதன் மறு முனையைக் கற்பனை செய்ய முயலும் தோறும், மூச்சடைத்து நீருக்குள்ளிருந்து வெளிவருவதுபோல இருக்கும். எதிர்கால பயம், தனிமை,  பதற்றம் என மனதுக்குள் பொங்கி வந்த வண்ணம் இருந்த ஒன்றின் படிமமாகவே காட்டை கற்பனை செய்திருப்பேன். அப்படி இருந்த நாட்களின் ஒன்றில் தான் காடு நாவல் வெளிவந்தது. கிரிதரனை மிக எளிதாகவே அடையாளம் கொண்டுகொள்ள முடிந்தது. அவன் ஒவ்வொரு முறையும் காட்டுக்குள் செல்லும்போதும் என் அகமும் அவனின் கைபிடித்துக் கொண்டு இருளுக்குள் நுழைந்தது. அவன் காட்டில் கண்ட  பூக்களைய...

பொற்குகை ரகசியம் - ஜெகதீஷ்

  பொற்குகை ரகசியம் - மெல்லிய உணர்வுகளின் வரைபடம். சமீபத்தில் என் மகளின் அறைக்குச் சாயம் அடிக்க அவளுக்கு பிடித்தமான நிறத்தைத் தேர்ந்தெடுக்கச் சொல்லியிருந்தேன். அவள் கொடுத்த அந்த நிறம் முதன்மை நிறங்களான சிவப்பு, நீலம், பச்சை என அல்லாமல் ஏதோ ஒரு நிறத்திலிருந்தது. இவை எப்படியும் கிடைக்கப்போவதில்லை என்று தைரியமாகக் கடைக்குச் சென்று அவரிடம் கொடுத்தவுடன் அவர் ஒரு வாளியை எடுத்து வந்து என் முன் திறந்தார். அதில் வெள்ளை நிறத்தில் சாயம் இருந்தது. அதில், இரண்டு சொட்டுகள் வேறு சில அடர் நிற சாயங்களைச் சேர்த்துவிட்டு ஒரு இயந்திரத்தில் சொருகிக் கலக்கித் திறந்தவுடன், அதில் நான் கேட்ட நிறத்தை ஒத்த சாயம் இருந்தது. பள்ளியில் படித்தது தான். ஆனால் அது தந்த உணர்வு வித்தியாசமாக இருந்தது. இந்த நிறத்தின் பெயர் என்ன? இன்னும் இரண்டு சொட்டுகள் அடர் நிறங்களின் சாயத்தைச் சேர்த்திருந்தால் அது வேறு ஒரு வண்ணமாக இருந்திருக்கும். அதன் பெயர் என்ன? இப்படி எண்ணிடலாகப் பெயரில்லா நிறத்தையும் அது ஒவ்வொன்றும் கொடுக்கும் உணர்வையும் அனுபவித்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது.      அன்றாட வாழ்க்கையில் நாம் அடை...