கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன் - ரசனையுரை
அசோகமித்திரன் அவரின் சினிமா துறை சார்ந்த அனுபவங்களை வைத்து ஒரு குறுநாவலாக எழுதியுள்ளார். கதை என்பது என்று ஏதும் இல்லாமல் நிகழ்வுகளை அதன் நுணுக்கத்துடன் மிகையுணர்ச்சி ஏதுமில்லாமல் அவர் எழுதும் சிறுகதையை போலவே இந்நாவல் அமைந்துள்ளது. பொதுவாக அவரின் கதையில் நிகழும் நிகழ்வுகள் படிக்கும்போது ஏற்படுத்தும் தாக்கத்தைவிட வேறு ஏதோ ஒரு பொழுதில் சட்டென நம்மை நிறுத்தி அதனை சிந்திக்க வைத்து அந்நிகழ்வு மெல்ல நம்முள் விரிவடைந்து விரிவடைந்து அதில் இருக்கும் ஒரு ஆழமான வாழ்க்கையின் ஒரு உண்மையை கண்டடைய வைக்கும் அந்த உணர்வு இந்நாவலிலும் ஏற்படுகிறது. இந்நாவலில் முதல் அத்தியாயத்திலேயே கிட்டத்தட்ட எல்லா கதாப்பாத்திரங்களையும் அறிமுகப்படுத்திவிடுகிறார். பின்பு நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் முதல் அத்தியாயத்தில் வந்த வெவேறு கதாப்பாத்திரத்தின் வழியே காலத்தின் ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து மற்றொன்றுக்கு தாவி சென்று கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு புள்ளியிலும் மனிதர்கள் அடைந்த ஏற்றமும் இறக்கமும் போகிறபோக்கில் மிகையில்லாமல் அது தான் யதார்த்த்தம் என்பது போல சொல்லி செல்கிறது. அது காட்டும் வாழ்க்கையின் சித்திர...