Posts

Showing posts from July, 2024

கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன் - ரசனையுரை

Image
    அசோகமித்திரன் அவரின் சினிமா துறை சார்ந்த அனுபவங்களை வைத்து ஒரு குறுநாவலாக எழுதியுள்ளார். கதை என்பது என்று ஏதும் இல்லாமல் நிகழ்வுகளை அதன் நுணுக்கத்துடன் மிகையுணர்ச்சி ஏதுமில்லாமல் அவர் எழுதும் சிறுகதையை போலவே இந்நாவல் அமைந்துள்ளது. பொதுவாக அவரின் கதையில் நிகழும் நிகழ்வுகள் படிக்கும்போது ஏற்படுத்தும் தாக்கத்தைவிட வேறு ஏதோ ஒரு பொழுதில் சட்டென நம்மை நிறுத்தி அதனை சிந்திக்க வைத்து அந்நிகழ்வு மெல்ல நம்முள் விரிவடைந்து விரிவடைந்து அதில் இருக்கும் ஒரு ஆழமான வாழ்க்கையின் ஒரு உண்மையை கண்டடைய வைக்கும் அந்த உணர்வு இந்நாவலிலும் ஏற்படுகிறது. இந்நாவலில் முதல் அத்தியாயத்திலேயே கிட்டத்தட்ட எல்லா கதாப்பாத்திரங்களையும் அறிமுகப்படுத்திவிடுகிறார். பின்பு நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் முதல் அத்தியாயத்தில் வந்த வெவேறு கதாப்பாத்திரத்தின் வழியே காலத்தின் ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து மற்றொன்றுக்கு தாவி சென்று கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு புள்ளியிலும் மனிதர்கள் அடைந்த ஏற்றமும் இறக்கமும் போகிறபோக்கில் மிகையில்லாமல் அது தான் யதார்த்த்தம் என்பது போல சொல்லி செல்கிறது. அது காட்டும் வாழ்க்கையின் சித்திர...

அம்மா வந்தாள் - தி ஜானகிராமன் - ரசனையுரை

Image
திரு. தி.ஜானகிராமன் அவர்கள் எழுதிய நாவலோ அல்லது சிறுகதைகளோ இதற்கு முன் படித்ததில்லை. அவரின் 'மோகமுள்' நாவலைப் பற்றிப் பரவலாக இலக்கிய உலகில் பலர் பேசி விமர்சித்துக் கேள்விப்பட்டிருக்கிறேன். "அம்மா வந்தாள்" என்ற நாவலைப் பற்றியும் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் "நல்ல நாவல். படிக்கவேண்டும்" என்பதைத் தவிரப் பிற ஒன்றும் நினைவில் இப்போது இல்லை. எது இந்த நாவலை வாங்கத் தூண்டியது என்று இப்போது சரியாக நினைவில்லை. வாங்கி என் புத்தக அலமாரியில் படிக்க வேண்டும் என்ற வரிசையிலிருந்தது.  இந்நாவலில் வரும் கதைப்பின்னணி கும்பகோணத்தில் பிறந்த எனக்கு மிக நெருக்கமான ஒன்றுதான். பள்ளிக்குச் செல்லும் போது காவேரி ஆற்றைக் கடந்து திரும்பும் ஒரு திருப்பத்தில் வேத பாட சாலை ஒன்று இருக்கும். அதன் பெரிய சுவருக்குப் பின்னால் பல சிறுவர்களும் என் வயதொத்த இளைஞர்களும் வேதங்களை வாய் விட்டுப் படித்து மனனம் செய்து கொண்டிருப்பார்கள். சைக்கிளில் அதைக் கடக்கும் போது அவர்கள் வாய்விட்டு வேதங்களைச் சொல்வது என் பள்ளிக்கூடத்தில் வாய்ப்பாடுகளை மனனம் செய்ய அனைவரும் அமர்ந்து ஒரே குரலில் சொல்வது நினைவ...