குள்ளச் சித்தன் சரித்திரம் - யுவன் சந்திரசேகர் - ரசனையுரை
சில வருடங்களுக்கு முன்பு என் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் தற்செயலாக இந்த கதையைப் பற்றிக் குறிப்பிட்டார். பின்பு விஷ்ணுபுரம் இலக்கிய விருதுக்குத் திரு. யுவன் அவர்கள் தேர்வான போது மீண்டும் இக்கதையைப் பற்றிய குறிப்புகளைப் படித்தேன். இன்று இந்நாவலைப் படித்து விட்டு எண்ணிப்பார்க்கும்போது அவைகள் தற்செயல்கள் அல்லாமல் ஏதோ ஒரு தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. பல சம்பவங்களின் தொகுப்பாகச் செல்லும் இந்நாவலில் ஊடே மனிதர்கள் அற்புதத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை, அது எழுப்பும் வாழ்க்கையின் மீதான கேள்வியை, தற்செயல்களில் கண்ணுக்குத் தெரியாமல் பிணைக்கப்பட்டிருக்கும் நூலிழையின் சாத்திய கூறுகளைக் காட்டுகிறது. திருமணமாகி வெகு நாட்களாகியும் பழனிக்கும் சிகப்புக்கும் குழந்தை பிறக்காமலிருக்கிறது. சிகப்பி இறை மீதான நம்பிக்கையும் கடுமையான சடங்குகளைப் பின்பற்...